செவ்வாய், 14 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 1

இருபுறமும் சூழ்ந்து இருக்கும் தில்லை மரங்களுக்கு இடையே உள்ள ஒற்றையடி
பாதையில் செந்நிற பட்டாடை அணிந்து அழாகன ஒரு இளம்பெண், ஆண் மயில் தோகை
விரிந்து வரும் அழகை போல கம்பிரமாக நடந்துவந்தாள், அவள் காலில் உள்ள
சலங்கை ஒலி அழகான இனிமையான இசை வாசிக்க. அவளது முகமே சந்திரன் போல
பிரகாசிக்க, வானில் இருந்து தேவலோக ரம்பையே பூமிக்கு வந்தாகவே
தோன்றுகிறது, இவள் அழகை கண்டு பித்தனாகாதவர்கள் இந்த தில்லை நகரிலே
இல்லை,

தில்லையில் நடராஜன் நடணமாதும் அவரின் சன்னிதானத்தில், இவள் ஆடும் அந்த
பரதத்தில் அந்த கைலாயமே அதிரும், பஞ்ச பூதங்களையும் பரதத்தில் இவள்
பிடிக்கும் ஆபிநயத்தில் அடக்கும்.
regaan

அதனால் தான் என்னவோ இவள் பிறக்கும் போதே இவளுக்கு பஞ்சவன்மகாதேவி என்று
பெயர் சூட்டினார்களோ என்று என்ன தோன்றுகிறது.

(அரசு குலத்தில் பிறந்து இருக்கவேண்டியவள், அவள் தலை விதியால் சாதாரண
குதிரை காவாளியின் மகளாக பிறந்தால் இன்று தேவராட்டியாக ஆக்கப்படாடாள் சேர
அந்தனார்களின் சூழ்ச்சியால்.

திருநள்ளாறு நம்பிராஜன் மட்டும் இவளை சேர அந்தனர்களிடம் இருந்து காப்பாற்றி
அந்த தில்லை நடராஜனுக்கு சேவகம் செய்ய பணியாமல் விட்டால், என்னவாகி
இருக்கும் இவள் வாழ்வு. தில்லை நடராஜன் முன் அதிகாலையில் தினமும் தன்
நடணத்தை அரங்கேற்றுவது தான் இவள் பணி, என்றும் போல இன்றைய விடியலும்
சாதராண விடியலாக இல்லாமல் காலத்தை மாற்றிய மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
இவளால் ஏற்படுத்தும் என்று கனவிலும் இவள் நினைத்து இருக்கமாட்டாள். 

சோழ தேசத்தின் குலவிளக்கான இளவரசி குந்தவைப்பிராட்டிக்கு இனையாக இவளும் மாற
போகிறாள் என்று கனவு கூட இவள் கண்டு இருக்கமாட்டாள். இவள் வாழ்வில்
அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை தொடர்வோம். கடல் கடந்த பல தேசங்களை
வென்ற ஒரே ஒரு இந்திய மன்னன் ராஜேந்திர சோழன் இந்த தேவராட்டிக்காக கோயிலே
கட்டினான் என்பது வரலாறு.)
Tenkarai Brahmadeyam Sri Cholamadevi Chadurvedi Mangalam

"திருவாசகம் கேட்டாலே உருகாத நெஞ்சமும் உருகும், அதை நம்பிராஜன் பாடினால்
ஆஹா என்ன அற்புதம், அந்நாவுக்கு அரசரே அவர் நாவில் கூடிஇருக்கிறார்,
இன்று அவரிடம் தேவாரம் பாடல்களை கேட்டு என் உள்ளம் மகிழவேண்டும், கவலைகள்
மறக்கவேண்டும்," என்று எண்ணியவாரே மனமகிழ்ச்சியூடன் மார்கழி குளிரில்
நடுங்கி கொண்டு சிதம்பரம் ஆலயம் நோக்கி வேகமாக நடக்கலானார் பஞ்சவன்மகாதேவி.

"ஏய் பஞ்சவன்தேவி உனக்காக எவ்வளவு நேரம் அரசுமரத்தில் காத்து இருப்பது,
என் இவ்வளவு காலதாமதம், நம்பிராஜன்அடிகளார், இன்று நடராஜன் முன் தேவாரம்
பாட வந்து இருப்பதை அறிந்துமா இவ்வளவு தாமதம்"

"பேசுவதற்கு நேரம் இல்லை கயல், வேகமாக வா."

"உனக்காக காத்து இருந்தது நான், தாமதமாக வந்தவள் நீ. என்னை குறை
சொல்கிறாயா?" கயல்விழி இரு கைகளை கட்டிகொண்டு கோபமாக கேட்க, அவளது கைகளை
பற்றி கொண்டு பஞ்சவன்மகாதேவி வேகமாக நடராஜன் கோயிலை நோக்கி ஒடி
அரம்பித்தாள்..

சரியாக பூஜை அரம்பிக்கும்பொழுது சன்னிதானத்துக்குள் சென்றுவிட்டனர்,

அலகாரிக்கப்பட்ட நடராஜன் சன்னிதானம் திறக்கப்பட அதை வணங்கிவிட்டது தன்
தோழியூடன் நாட்டியத்தை அரங்கேற்றிறாள் பஞ்சவன் தேவி,

இறைவனை தொழுதுவிட்டு, காவி உடை அனிந்த வயதான முனிவர் போன்று காட்சி
அளித்த நம்பிராஜன் நம்பியை வணங்கி நின்றாள்.

"மகளே உனக்கு என்றுமே ஈசன் துணை நிற்பாராக, எப்படி இருக்கிறாய் மகளே"

"அய்யனே, தங்கள் ஆசிர்வத்தால், நான் மிகவும் நலமாக இருக்கிறேன், தங்கள்
எனக்கு வாழ்வு அளித்தவர்கள் அல்லவா,"

"அவளுக்கு நீங்கள் வாழ்வு அளித்தீர்கள், ஆனால் அவள் என்னிடம் அதிகாரம்
செய்தே என்னை அடிமையாக்கிவிட்டாள்" என்று வழக்கமான தன் குறும்பு
சிரிப்புடன் தன் அவலங்களை கயல்விழி கூற, அவளை கண்டிக்கும் பார்வையில்
பேசுவதை நிறுத்த சொல்லி பரத்தின் அபிநயம் பிடிக்க இவர்கள் இருவரது செயலை
ரசித்து சிரித்து கொண்டே நம்பிராஜன் தேன்மொழியை நோக்கி, "மகளே, உன்னை
பஞ்சவன்தேவி ஏவல் புரிந்தற்காக வருத்தப்படுகிறாய், ஒரு காலம் வரும் இவள்
நம்மிடம் ஏவல் புரியமட்டாளா என்று நீ ஏங்கும் காலம் வரும்"

அதை கேட்டு வயிறு குலுங்க சிரித்து கொண்டு, " இவளது கட்டளைக்காக விழி
மேல் விழி வைத்து காத்து இருக்க, இவள் ஒன்று சோழ தேசத்து இளவரசி அல்லவே"
என்று ஏளனமாக கூற

"அய்யனே இவள் குறும்புகாரி இவள் துடுக்குதனமாக பேசியதற்கு மண்ணிக்கவும்,
இவள் எப்பவும் இப்படி தான் யாருடன் எப்படி பேசவேண்டும் என்பதை
தெரியாதவள்."

"மகளே அவள் சொல்வதில் தவறே இல்லை"என்று கூறிவிட்டு கயல்விழியை நோக்கி

"மகளே கயல்விழி, பஞ்சவன்தேவியின் திறமைக்கு சோழ தேசத்து அரசியாகவே
ஆகலாம், இவளை மணக்க சோழ தேசத்து அரசன் கொடுத்துவைத்து இருக்கவேண்டும்."


"என்னது நம் மன்னன் மதூராந்தக தேவர் இவளை மணக்க கொடுத்துவைத்து
இருக்கவேண்டுமா, முதிய பருவத்தில் இருக்கும் நம் மன்னர் இவளை மணக்க
விரும்புவாரா?"

பஞ்சவன்தேவி கயல்விழியை சினத்துடன் நோக்கி "ஏய் கயல் உன் திருவாயை
கொஞ்ச நேரம் திறக்காதே,"

"சரி சரி உண்மையை கூறினாள் உனக்கு கோபம் தான் வரும் நான் என் திருவாய்
திறக்கல சரியா"

"அய்யனே தங்களிடம் இருந்து திருவாசகம் கேட்க அவலாக வந்தேன் ஆனால் இவளால்
எல்லாம் மறந்துவிட்டேன், தாங்கள் குரல் அமுதை எங்க செவி பருக அவலாக
உள்ளது, தாங்கள் எங்களுக்காக பாடுவீர்களா?"

"என் கோரிக்கை வைக்கிறாள், நீ தான் சோழ அரசியாகிற்றே கட்டளை இடலாமே"
என்று மீண்டும் தன் குறும்பு பேச்சை கயல்விழி தொடங்க


அதை அமோதிக்கும் வகையில் "மகளே, உன் தோழி கூறியது போன்று, நீ எனக்கு
கட்டளையே இட்டு இருக்கலாம், மகளே உனக்ககாக    பாடுகிறேன்"


ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
                        ஒருவனாய் நின்றாய், நீயே; 
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
                        மருகனாய் நின்றாய், நீயே; 
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
                       என்மேல் வைத்தாய், நீயே; 
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு

                       அகலாத செம்பொன்சோதீ!.
"ஆகா! என் இனிமையான பாடல்கள்!, என் இனிமையான குரல்!, இந்த பாடலை வாழ்நாள்
முழுவதும் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது, அய்யனே தில்லை நடராஜனுக்காக
திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை எங்கள் செவி கேட்க தவம் இருக்கிறது,
தாங்கள் வரம் தரவேண்டும்",

"மகளே! நான் வாழ்வதும் பாடுவதும் அந்த தில்லை நடராஜனுக்காக, என்
ஈசனுக்காக திருவாசகத்தில் இருந்து பாடுகிறேன், கேள் மகளே! "


தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

"அய்யனே உங்கள் நாவில் சரஸ்வதியே கூடி இருக்கிறாள், அய்யனே இதை போன்று
அப்பர் சுந்தர் மாணிக்கவாசர் திருவாசகர் பாடிய   அனைத்து பாடல்களும்
பாடுவீர்களா?"

"மகளே எல்லா பாடல்களும் தெரியாது, கொஞ்சம் தான் தெரியும், நான் இன்று
சிதம்பரம் வந்ததே அதற்காக தான், இங்கு கோயில் சிறைபடுத்தப்பட்டு
இருக்கும் நான்கு சிவனடியார்கள் பாடிய ஒலைசவடியை மீட்பது என்கிற முடிவில
இங்கு வந்து இருக்கிறேன், அந்த நூல்களை தொகுத்து சோழ தேச முழுவதும் உள்ள
சிவலயங்களில் இசைக்க செய்வதே எனது கனவு,"

"அய்யனே தங்கள் எடுத்த காரியம் உயர்தரமானது, ஆனால் இதை இங்கு உள்ள சேர
அந்தணர்கள் செய்ய விடுவார்களா?, அவர்களிடம் தானே அதிகாரமே உள்ளது.
அவர்கள் தருவார்களா அறை சாவியை"

"மகளே இது சோழ தேசம், சைவத்தை வளர்க்கும் பூமி, நமக்கு ஈசன துணை உண்டு,
நாம் தான் மீட்க வேண்டும் நம் தெய்விக நூல்களை, சாவி எதற்கு கடப்பாரை
போதாதா? நீயும் என்னுடன் வருகிறாயா?"


"அய்யனே தங்களுக்காக உதிரம் சிந்தவும், உயிர் கொடுக்கவும் காத்து
இருக்கிறேன், நீங்கள் அழைப்பது இறை பணிக்காக நான் வராமல் இருப்பேனா"
என்று பெண் சிங்கம் போல கர்ஜிக்க. இருவரது உரையாடலை கேட்டு மிரண்ட
கயல்விழி அவ்விடம் விட்டு வேறு காரணம் கூறி நழுவிட்டாள்.

நம்பிராஜன் நம்பியூடன் சேர்ந்து சிதம்பர அலயம் பின்புறம் உள்ள
கருவூலதற்கு சென்றார்கள் ஆங்கு கதவுகளில் உள்ள பூட்டுகளை கற்களால் உடைக்க
அரம்பித்தார்,
இச்செய்தி சேர அந்தனர்கள் தெரியவர அவர்கள் சினம் கொண்டு ஆங்கு வர
நம்பிராஜன் நம்பி பூட்டுகளை கஷ்டபட்டு உடைபதை கண்ட ஒரு சேர அந்தனர்
கோவிந்த ராஜன் தன் வலிவை கொண்டு நம்பி ராஜன் நம்பியை கிழே தள்ளிவிட
கூழாங்கற்களை நம்பிராஜன் நம்பியின் நெற்றியை பதம்பார்க்க அதனால் முகம்
முழுவதும் குருதி பரவிட வலியால் துடித்தார், இதை கண்ட பஞ்சவன் தேவி
ஆவேசமாக சபித்தாள், "சிவனடியாரை அடித்த நீங்கள் கைலாயம் போகவே
மாட்டீர்கள்."

இதை கேட்ட சேர அந்தனர்  ஒருவர் "கவலைபடாதே நாட்டியக்காரியே, நாங்கள்
வைகுண்டம் செல்வோமே தவிர, கைலாயம் செல்லவே மாட்டோம்,

வந்தாரை வாழ வைக்கும் வைகுண்டம் இருக்க கைலாயம் எதற்கு?"

பஞ்சவன்தேவியை பலமுறை அடைய துடித்த சிதம்பரத்தை நிர்வாகிக்கும்
சகாதேவனின் இளவயது மகன் தன் கலவி பேச்சை அரம்பிக்க " பஞ்வன் தேவியே,
என்று என் பஞ்சனை தேவியாக மாறுவீர், ஈசனுடன் நாட்டியம் ஆடி என்ன இன்பம்
கண்டீர், என் முன் உன் நாட்டியத்தை அரங்கேற்று நான் தரும் இன்பத்தை கண்டு
அகமகிழ்வாய்"


"சிவ சிவாய்? ஈசன் இது என்ன சோதனை உன் சன்னிதான்திலே" என்று பஞ்சவன் தேவி அழ இதை கண்ட நம்பிராஜன் நம்பி, "நீங்கள் செய்கின்ற காரியத்தை நீங்கள் வணங்கும் பெருமாளே பொறுத்து இருக்கமாட்டார், பெண்ணிடம் பேச கூடிய வார்த்தைகளா இது?"


"கிருஷ்ண அவதாரத்தில் எங்கள் பெருமாள் விளையாட விளையாட்டாயா நான்
விளையாடிவிட்டேன்."

"அவர் தெய்வம் நீ தெய்வமா? நீ செய்கின்ற காரியத்திற்கு எங்கள் சோழ மன்னர்
அறிந்தால், அவர் தண்டனையில் இருந்து நீர் தப்பவே முடியாது" இதை கேட்ட சேர
அந்தனர் ஒருவர் "புலியை கொன்ற இனமடா நாங்கள் இந்த கிழத்து புலி என்ன
செய்துவிடும்" என்று கூறிவிட்டு பஞ்சவன் தேவியையும் நம்பிராஜன் நம்பியை
தர தர என்று இழுத்து ஆலயத்தை விட்டே வெளியேற்றினர், அவர்கள் இழுத்தால்
பஞ்சவன் தேவியின் ஆடைகள் கிழிந்து அதை மறைக்க தன் காவி நிற போர்வையை
போற்றிவிட்ட நம்பிராஜன் நம்பி உரக்க குரலில்,"நீங்கள் இந்த பெண்ணிடம்
செய்த இழுக்கான செயலிற்கு அந்த ஈசனே உங்களை தண்டிக்க வருவார்."

"எங்கே வர சொல்லும், அந்த ஈசனை ஒரு கைபார்ப்போம்."    

அதே நேரத்தில் சிதம்பர சிவலாயம் நோக்கி புழுதி புயலை கிளப்பி வேகமாக இரு
புரவி வர அதை கண்ட நம்பிராஜன் நம்பி இதோ ஈசன் அனுப்பிய சேகவர்

சேகவர் வந்துவிட்டார், அவரிடம் காட்டுங்கள் உங்கள் வீரத்தை

வந்த இருவரை கண்ட உடன் ஆங்கு இருந்த சேர அந்தனர்கள் கதிகலங்கி தான்
போய்விட்டார்கள்.

அந்த இருவர்கள் யார் என்று அடுத்த திங்கள் வரை காத்து இருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக